search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தாண்டையொட்டி பூக்கள் விலை கிடு, கிடு உயர்வு- பிச்சிப்பூ ரூ.1500-க்கு விற்பனை
    X

    புத்தாண்டையொட்டி பூக்கள் விலை கிடு, கிடு உயர்வு- பிச்சிப்பூ ரூ.1500-க்கு விற்பனை

    புத்தாண்டையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கல் விலை உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ ரூ.1500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #thovalaimarket
    நாகர்கோவில்:

    தோவாளை பூ மார்க்கெட்டுக்கு நெல்லை, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த ஒரு மாத காலமாக கடுமையான பனிப்பொழிவு உள்ளதால் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புத்தாண்டையொட்டி பூக்கள் வாங்குவதற்கு ஏராளமான வியாபாரிகள் இன்று காலையில் தோவாளை பூ மார்க் கெட்டில் குவிந்திருந்தனர். இதனால் மார்க்கெட் களை கட்டி இருந்தது.

    மல்லிகை, பிச்சிப்பூக்களின் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகமாக இருந்தது. பிச்சிப்பூ கிலோ ரூ.1500-க்கு விற்கப்பட்டது. இதேபோல் மல்லிகைப்பூவும் நேற்றையவிட இன்று விலை உயர்ந்து காணப்பட்டது. கிலோ ரூ.2200-க்கு விற்கப்பட்டது.

    சம்பங்கி ரூ.40, கேந்தி ரூ.60, ரோஜா ரூ.90, கோழிப் பூ ரூ.40, வாடாமல்லி ரூ.40, கனகாம்பரம் ரூ.800, துளசி ரூ.30, சிவந்தி ரூ.80-க்கு விற்பனையானது.

    விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், பனிப்பொழிவின் காரணமாக பூக்கள் குறைந்த அளவுதான் வருகின்றன. ஆனால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். #thovalaimarket
    Next Story
    ×