search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்லூரில் தாய் இறந்த சோகத்தில் தொழிலாளி தூக்கில் தொங்கினார்
    X

    செல்லூரில் தாய் இறந்த சோகத்தில் தொழிலாளி தூக்கில் தொங்கினார்

    மதுரையில் தாய் இறந்த சோகத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    மதுரை:

    மதுரை செல்லூர் கீழ வைத்தியநாதபுரம் அன்னை தெரசா தெருவைச் சேர்ந்தவர் முத்துகாமாட்சி (வயது 42). தொழிலாளி. இவரது தாயார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்தார். இதனால் முத்துகாமாட்சி மன வேதனை அடைந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்துகாமாட்சி தூக்கில் தொங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே முத்துகாமாட்சி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி காளீஸ்வரி செல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×