search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுசீந்திரம் அருகே பெருமாள் சிலை உடைப்பு- வாலிபர் கைது
    X

    சுசீந்திரம் அருகே பெருமாள் சிலை உடைப்பு- வாலிபர் கைது

    சுசீந்திரம் அருகே பெருமாள் சிலையை கல்லால் உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    என்.ஜி.ஓ.காலனி:

    சுசீந்திரம் அடுத்த புதுக்கிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. நேற்று கோவிலில் பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் நடை சாத்தப்பட்டது.

    இந்த நிலையில் இரவு கோவிலில் இருந்த கட்டையன் மாடன் பெருமாள் சிலை உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த கோவில் நிர்வாகி சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல்ஜெனிஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் சாமி சிலையை கல்லால் உடைத்து சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சாமி சிலையை கல்லால் உடைத்து சேதப்படுத்தியதாக அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற மணிகண்ட பிரபு(வயது32) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×