search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடி பகுதியை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது
    X

    போடி பகுதியை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது

    போடி பகுதியை கலக்கிய பிரபல கொள்ளையன் கைதானான்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் பீதியில் உறைந்து போனார்கள்.

    எனவே கொள்ளையர்களை பிடிக்கும் வகையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாயன் அடங்கிய தனிப்படை குழு அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இரவு பகலாக போடி நகர் மற்றும் புறநகர் பகுதியில் ரோந்து வந்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போடி நகரை கலக்கிய பிரபல கொள்ளையன் மனோஜ் என்பது தெரிய வந்தது.

    போடி தேவர் காலனியைச் சேர்ந்த இவர் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார். இவரிடம் இருந்து 16 பவுன் நகை, ரூ.20 ஆயிரம ரொக்கப்பணம் ஆகியவை மீட்கப்பட்டது. கொள்ளையனை போலீசார் கைது செய்து போடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    Next Story
    ×