search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து
    X

    தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து

    புத்தாண்டு மலருகின்ற இந்த இனிய நாளில், கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #newyear2019 #partyleaders

    சென்னை:

    புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:-

    உலக ஜனத்தொகையில் அதிகப்படியான இளைஞர்களை கொண்ட நமது நாட்டில், இளைஞர்களின் எதிர்கால வாழ்வை வள மாக்கி உலகை வெல்லும் வல்லமை படைத்தவர்களாக ஒவ்வொரு இந்திய இளைஞனும் உருவாகும் காலத்திற்கான துவக்கம் 2019. இந்த நல்ல நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக இந்திய மக்கள் ஒவ்வொருவரும் நல்லமுடி வினை எடுத்து, நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு பக்கபலமாக துணைநிற்க வேண்டும் என்ற எனது அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    இந்திய நாடு மதச்சார்பற்ற நாடு. ஜாதி, மத, மொழி வேற்றுமைகளை மறந்து நாம் அனைவரும் இந்தியத் தாயின் புதல்வர்களாக பல்வேற்றுமைகளிலும் ஒற்றுமை உள்ளவர்களாக வாழ்ந்து வரும் நிலை ஏற்பட வேண்டும். வெறுப்பு அரசியல் அகன்றிட வேண்டும். ஆட்சிகள் ஊழல் அற்றதாக, ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றதாக இருந்திட வேண்டும்.

    இப்புத்தாண்டில் மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரும்பும் நல்லாட்சி மலர்ந்திட வேண்டும். மாற்றங்கள் நிகழ்த்தப்பட மக்கள் இந்நாளில் சபதம் ஏற்க வேண்டும்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன்:-


    ஊழல் இல்லாத ஆட்சி நடத்தி காட்டிய சாதனை நாயகன், மெய் வருத்தம் பாராமல், கண் துஞ்சாமல், ஓய்வின்றி நாட்டு மக்களுக்காக உழைத்த நம் பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சி மீண்டும் அமைய இப்புத்தாண்டில் நாம் அனைவரும் சபதமேற்போம்.

    2019-ம் ஆண்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்ற வேண்டும். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக் கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட வேண்டு மென எனது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    இந்த புத்தாண்டாவது சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு இன்றி, சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனித நேயம் மலர்ந்திட வேண்டும்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    2019-ம் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் இணைந்து மக்களும் கடைபிடிக்க வேண்டும். அல்லவை அகன்று நல்லவை நிறைந்த ஆண்டாக 2019-ம் ஆண்டு அமைய வேண்டும். தமிழ் நாடு இதுவரை சந்தித்த ஏமாற்றங்கள் அனைத்தும் பழங்கதையாகி மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட வேண்டும். அதன் பயனாக தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் வளர்ச்சியும், மலர்ச்சியும் மட்டுமே தொடர்கதையாக வேண்டும். அதற்காக இப்போதிலிருந்தே உழைக்க ஆங்கிலப் புத்தாண்டு நாளில் தமிழக மக்கள் அனைவரும் சபதம் ஏற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன்:-

    மீண்டும் அம்மாவின் உண்மையான நல்லாட் சியை தமிழகத்தில் இப்புத் தாண்டில் படைத்திட நம் இதயங்களும், கரங்களும் ஒன்றிணையட்டும்.

    மலர்ந்திடும் இப்புத்தாண்டில் மதநல்லிணக்கமும், சகோதர நேசமும் மேலோங்கிடும் மகிழ்ச்சியின் ஆண்டாக, செழிப்பின் ஆண்டாக, சாதனைகளை நாம் செதுக்கிடும் ஆண்டாக அமைந்திடட்டும் என வாழ்த்தி மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித் தாக்குகிறேன்.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையமாக ஆக்கி, அதற்கு முன்பும்பின்பும் இரண்டாகப் பகுக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குப் பின் தற்போது இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து, இந்த நாளில் 2019-ல், உலகம் அடி எடுத்து வைக்கின்றது.

    தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற வாக்காளப் பெருமக்கள் இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டுகின்றேன்.

    அதன் தொடர் விளைவாக, தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க தமிழக வாக்காளப் பெருமக்கள் கடமை ஆற்ற வேண்டும். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

    மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்தி ஒன்றுபட்டு விரிவான பரந்துப்பட்ட, மக்கள் மேடை அமைப்பதும், மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்து வகுப்புவாத சக்திகளையும், நிதிமூலதன சக்திகளையும் அகற்றுவதும் 2019-ம் ஆண்டு முன்நிறுத்தும் கடமையாகும்.

    காலம் முன்னிறுத்தும் கடமையினை நிறைவேற்ற புத்தாண்டில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-


    ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கஜா புயலால் கடும் துயரத்தை சந்திக்க நேர்ந்தது. தூத்துக்குடி பயங்கரம் நிகழ்ந்தது. ஆற்றுநீர் பிரச்சினைகள் நம் அமைதியை சீர்குலைத்தது. இவ்வாறு பல இன்னல்களை சுமந்த ஆண்டாக 2018 கடந்து இருகிறது.

    புதிய ஆண்டு 2019 இயற்கை பேரிடர் இல்லாத ஆண்டாக, இன்னல்கள் நம்மை சூழாத ஆண்டாக, ஜனநாயகம் தழைக்கும் ஆண்டாக மலர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புகிறது.

    தமிழகத்திலும் அகில இந்திய அளவிலும் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு ஆட்சி அதிகாரத்தை வெல்லும் ஆண்டாக அமைய வேண்டும், அதற்கு ஏதுவாக புத்தாண்டு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்கும் தமிழ் மக்களாகிய நாமெல்லாம் தமிழ்நாட்டில் இனி ஒரு போதும் லஞ்ச லாவன்யத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம், நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடிய நல்லோர்களை தேர்ந்தெடுப்போம், வளமான தமிழகத்தையும் வலிமையான பாரதத்தையும் படைப்போம் என்று உறுதி ஏற்போம்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கியுள்ள அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பகுதிநேர ஊழியர்கள், அனைவருக்கும் வரும் புத்தாண்டில் விடிவு காலம் பிறந்திட வேண்டும். மத்தியில் உள்ள சர்வாதிகார ஆட்சியும், மாநிலத்தில் உள்ள செயல்படாத ஆட்சியும் முழுமையாக அகன்றிட வரும் புத்தாண்டு வழிவிடட்டும்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இந்திய இறையாண்மைக்கும், சகிப்புத்தன்மைக்கும் சவால்விட்டு ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் அதிகாரத்தை தகர்க்கும் விதமாகவும், தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தும் 2019-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    புதிய நீதிக்கட்சித் தலை வர் ஏ.சி.சண்முகம்:-

    ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தொடங்கிவிட்டால் இல்லாமை, இயலாமை போன்ற தீமைகளை நம் தேசத்தைவிட்டே விரட்டி விடலாம். ஒவ்வொரு குடும்பமும் வளமானால் ஒட்டுமொத்த தேசமும் வளமாகும். இந்த நாடும் யாராலும் அசைக்க முடியாத வல்லரசாகும். நம்நாட்டை உயர்த்த நாட்டுமக்கள் அனை வரும் கரங்கள் கோர்ப்போம். இந்த இனிய புத்தாண்டு தினத்தில் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    இந்த புத்தாண்டில் சாதி, சமய, மொழி வேறுபாடுகளை மறந்து, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற சகோதர எண்ணத்துடன் செயல்பட வேண்டும்.

    இந்த புத்தாண்டு மக்களுக்கு நன்மைகளையும், நம்பிக்கைகளையுமே வழங்கும் ஆண்டாக அமைய வேண்டும். ஊழலயற்ற, பொதுநலன் காக்கும் அரசு அமைய வேண்டும்.

    தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் அருள்தாஸ்:-

    2019-ம் ஆண்டு தமிழக மக்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சிதரும் ஆண்டாகவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையக்கூடிய ஆண்டாக அமைந்திடவும், ஜாதி, மதம் கடந்து தமிழக மக்கள் அனைவரும் தமிழன் என்ற உணர்வோடும், அன்பு, அமைதி, சகோதரத்துவத் துடன் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று வாழ் வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

    மேலும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள தலைவர்கள் விவரம் வருமாறு:-

    பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், மக்கள் தேசிய கட்சித் தலைவர், சேம.நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #newyear2019 #partyleaders

    Next Story
    ×