search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கண்டக்டர் பலி
    X

    திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கண்டக்டர் பலி

    திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கண்டக்டர் பலியானார்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கொம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மணிகண்டன் (வயது 20). தனியார் பஸ் கண்டக்டர்.

    கொம்பாடியில் இருந்து மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் திருமங்கலம் புறப்பட்டார். விருத்தன்குளம் வளைவு பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் சரிந்தது.

    இந்த விபத்தில் மணிகண்டன் பலத்த காயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மணிகண்டன் இறந்தார்.

    விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×