என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவள்ளூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
திருவள்ளூர்:
திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அடிக்கடி நடந்து வந்தது. இது குறித்து திருவள்ளூர் டவுண் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து திருவள்ளூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் டோல் கேட் அருகே டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கேடசன் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராகிக்குமாரி, ராஜேந்திரன் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி விசாரித்த அவர்கள் கடம்பத்தூரை சேர்ந்த பாபு (30), சுகுமார்(34) என்பதும் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரிந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின்படி 5 திருட்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சம் ஆகும்.
கைதான இருவரும் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து திருவள்ளூர் சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்