search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசுவரூபம் எடுக்கும் எச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரம்: தனியார் மருத்துவமனை மீது மாணவி சார்பில் குற்றச்சாட்டு
    X

    விசுவரூபம் எடுக்கும் எச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரம்: தனியார் மருத்துவமனை மீது மாணவி சார்பில் குற்றச்சாட்டு

    அறுவை சிகிச்சைக்கு வந்த மாணவிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியது தொடர்பாக வழக்கு தொடரப்போவதாக வக்கீல் அறிவித்துள்ளார். #HIVBlood

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த மாணவி ரத்தம் உறையாமை நோயால் அவதிப்பட்டார். அவருக்கு மூக்கில் இருந்து தொடர்ந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

    அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மதுரை புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது மாணவிக்கு மூக்கில் ஆபரேசன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

    அதைத்தொடர்ந்து ஆபரே‌ஷன் நடந்தது. ஆபரே‌ஷனுக்கு பின்னர் ரத்தம் செலுத்தப்பட்டது. ஒருசில நாட்களுக்கு பின்னர் வீட்டுக்குச் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனவே மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மாணவிக்கு ஆபரே‌ஷன் நடந்த ஆஸ்பத்திரியில் கேட்ட போது அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை.

    எனவே ஆஸ்பத்திரி மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    தற்போது மாணவிக்கு ரத்தம் கொடுத்த ரத்த வங்கி செயல்பாட்டில் இல்லை. மாணவி தற்போது மதுரையில் உள்ள கல்லூரியில் நடனம் தொடர்பாக பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    உடல் நலக்குறைவு காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி பொதுநல வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #HIVBlood

    Next Story
    ×