என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வெவ்வேறு விபத்தில் 2 பெண்கள் பலி
கோவை:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மனைவி ஜெயந்தி (வயது 38).
சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் போடி பாளையம்- மலுமிச்சம் பட்டி ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த ஜெயந்தி சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அன்னூர் சத்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் அம்ஜத் பாட்ஷா. இவரது மனைவி ஜெய்தூன் (வயது 48). சம்பவத்தன்று இவர் தனது கணவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிள் அன்னூர்- அவினாசி ரோட்டில் சென்ற போது திடீரென ஜெய்தூன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அம்ஜத் பாட்ஷா அந்த வழியாக சென்றவர்கள் உதவியுடன் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜெய்தூன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்