search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே போதையில் தாயை தாக்க முயன்றவர் கைது
    X

    ஆண்டிப்பட்டி அருகே போதையில் தாயை தாக்க முயன்றவர் கைது

    ஆண்டிப்பட்டி அருகே போதையில் தாயை தாக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள எஸ்.ரெங்கநாதபுரத்தை சேர்ந்த வெங்கடசாமி மனைவி பாப்பம்மாள் (வயது90). இவரது மகன் செல்வம் (50). குடிபழக்கத்திற்கு அடிமையானவர். குடித்து விட்டு மனைவியிடம் டார்ச்சர் செய்துள்ளார்.

    இதனால் அவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார். இதனால் செல்வம் தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். பாப்பம்மாள் தனது 2-வது மகன் வீட்டிற்கு சென்று அழுது புலம்பி உள்ளார்.

    இதனால் செல்வத்தின் தம்பி அவரை கண்டித்தார். தன்னை பற்றி தம்பியிடம் கூறியதால் ஆத்திரம் அடைந்த செல்வம் குடிபோதையில் தனது தாயை தரக்குறைவாக திட்டி தாக்க முயன்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்தார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

    Next Story
    ×