search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் மாணவியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவர் கைது
    X

    கோவையில் மாணவியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவர் கைது

    கோவையில் 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் வயிறு பெரிதாக காணப்பட்டதால் அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் மாணவியின் கர்ப்பத்துக்கு அவரது அண்ணன் தான் காரணம் என்பது தெரியவந்தது. 18 வயதாகும் அவர் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து மாணவியிடம் விசாரணை நடத்திய போலீசார் மாணவியின் அண்ணன் மீது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் (போக்சோ) 2012-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×