search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரணியல் அருகே முறை தவறிய உறவால் இளம்பெண் தற்கொலை
    X

    இரணியல் அருகே முறை தவறிய உறவால் இளம்பெண் தற்கொலை

    இரணியல் அருகே முறை தவறிய உறவால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இரணியல்:

    இரணியல் அருகே கட்டுமாங்கோடு ஆசாரி விளையை சேர்ந்தவர் சாந்த குமார். இவரது மனைவி சைனி (வயது 26).

    இவர் நேற்று காலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சைனியின் தாயார் வல்சலா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சைனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் சைனி தற்கொலை செய்து கொண்டதற்கான திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    சைனிக்கும், அவரது கணவர் சாந்தகுமாருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சைனிக்கும், கணவரின் உறவுக்கார பையனுக்கும் இடையே முறைதவறிய பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த அக்கம், பக்கத்தினர் சைனியை ஏளனமான பேசினர். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சைனி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆஸ்பத்திரியில் அனுமதித்து அவரை காப்பாற்றினர். அதன்பிறகு சைனி தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 26-ந்தேதி அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கணவர் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். முறை தவறிய பழக்கத்தால் அவமானத்தில் இருந்த சைனி நேற்று திடீரென வீட்டின் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பேபிதங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தக்கலை டி.எஸ்.பி. கார்த்திகேயனும் விசாரணை மேற்கொண்டார். சைனிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×