என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாப்டூர் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
Byமாலை மலர்28 Dec 2018 11:11 AM GMT (Updated: 28 Dec 2018 11:11 AM GMT)
சாப்டூர் அருகே 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
பேரையூர்:
மதுரை மாவட்டம், சாப்டூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட குடிசேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்ல சாமி. இவரது மனைவி சித்ராதேவி (வயது 30). இவர்களுக்கு மர்வீன்குமார் (6), யுகேஷ் (2) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக செல்லசாமி வீட்டின் மாடிக்கு சென்று தூங்கி விட்டார்.
மறுநாள் காலையில் வீட்டுக்கு சென்று பார்த்த போது சித்ராதேவி, 2 மகன்கள் மாயமாகி இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லசாமி மனைவி, மகன்களை பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் பலன் இல்லை.
இதுகுறித்து சித்ரா தேவியின் சகோதரி ரதிதேவி சாப்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X