search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த் கணீர் குரலுடன் நலம் பெற்று திரும்புவார்- மகன் விஜய பிரபாகரன் நம்பிக்கை
    X

    விஜயகாந்த் கணீர் குரலுடன் நலம் பெற்று திரும்புவார்- மகன் விஜய பிரபாகரன் நம்பிக்கை

    அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை விஜயகாந்த் விரைவில் நலம் பெற்று கம்பீர குரலுடன் மீண்டும் வருவார் என்று விஜய பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Vijayakanth #VijayaPrabhakaran
    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இன்று சந்தித்தார். அப்போது அவர் உடலை வருத்தி போராட்டத்தில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஆசிரியர்களுடன் அமர்ந்து அவர்களது பிரச்சனைகளை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆசிரியர்களின் இந்த நிலைக்கு தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள்தான் காரணம். ஆசிரியர்கள் போராட்டம் பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் கவலைப்படாமல் உள்ளார்.


    எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த வி‌ஷயத்தில் தலையிட வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது ஆசிரியர்களின் சம்பளம் குறைவு. ஆனால் கல்வி தரம் 3-வது இடத்தில் உள்ளது.

    எனவே அவர்களது கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் எனது தந்தை விஜயகாந்த் விரைவில் நலம் பெறுவார். கம்பீர குரலுடன் அவர் மீண்டும் வருவார். பாராளுமன்ற தேர்தலுக்குள் அவரது உடல்நிலை சரியாகி விடும் என்று நம்புகிறேன்.

    தேர்தல் தொடர்பான முடிவுகளையும் அப்போது அவர் எடுப்பார்.

    இவ்வாறு விஜய பிரபாகரன் கூறினார். #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran #TeachersProtest
    Next Story
    ×