என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
போடியில் ராணுவ வீரர் மனைவி மர்ம மரணம்
மேலசொக்கநாதபுரம்:
போடி தருமத்துப்பட்டி கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ராசிங்காபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த மாரி முத்து மகள் சாந்தி (வயது 28) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது.
தற்போது சாந்தி 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் நேற்று போடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக வந்தார்.
வீட்டுக்கு வந்த சாந்தி பின்னர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் உடலில் இருந்து ரத்த கசிவு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தியின் மாமியார் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து போடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாந்தியின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்