search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டம்
    X

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் போராட்டம்

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #HIVBlood #PregnantWoman

    சாத்தூர்:

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பாதிக்கப்பட்டார். அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய சாத்தூர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இன்று சாத்தூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

    சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கத்தை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க மாநில செயலாளர் லட்சுமி மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். #HIVBlood #PregnantWoman

    Next Story
    ×