என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழைநீர் வடிகால் பணியில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி
Byமாலை மலர்26 Dec 2018 6:21 AM GMT (Updated: 26 Dec 2018 6:21 AM GMT)
மழைநீர் வடிகால் பணியில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
கீழ்ப்பாக்கம் தாசபிரகாஷ் சிக்னல் அருகே சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று இரவு முழுவதும் இதில் கம்பி கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இன்று அதிகாலை வேலை நடந்து கொண்டிருந்த போது திடீரென வடமாநில தொழிலாளி மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இறந்து போன தொழிலாளியின்பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. அவரது உடல் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X