search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழைநீர் வடிகால் பணியில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி
    X

    மழைநீர் வடிகால் பணியில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி

    மழைநீர் வடிகால் பணியில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கீழ்ப்பாக்கம் தாசபிரகாஷ் சிக்னல் அருகே சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இதில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு முழுவதும் இதில் கம்பி கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    இன்று அதிகாலை வேலை நடந்து கொண்டிருந்த போது திடீரென வடமாநில தொழிலாளி மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இறந்து போன தொழிலாளியின்பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. அவரது உடல் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×