search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் கற்பூரம் கொளுத்தினால் 3 ஆண்டு சிறை - தெற்கு ரெயில்வே எச்சரிக்கை
    X

    ரெயிலில் கற்பூரம் கொளுத்தினால் 3 ஆண்டு சிறை - தெற்கு ரெயில்வே எச்சரிக்கை

    தீப்பற்றக்கூடிய பொருட்களை ரெயிலில் கையாளக்கூடிய பயணிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. #Southernrailway
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சமீபத்தில் ஆன்மிக பயணத்துக்காக விடப்பட்ட சிறப்பு ரெயில், கோவை அருகே சென்றபோது ‘ஆராதனை’ என்ற பெயரில் பக்தர்கள் ரெயில் பெட்டியிலேயே கற்பூரம் கொளுத்தி வழிபட்டு உள்ளனர்.

    ரெயில்வே சட்ட விதிகளின்படி தீப்பெட்டி, கியாஸ் சிலிண்டர், திராவகம், பெட்ரோல், மண்எண்ணெய், கற்பூரம் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயணத்தின்போது எடுத்து செல்லக்கூடாது. விதிகளை மீறி தீப்பற்றக்கூடிய பொருட்களை ரெயிலில் கையாளக்கூடிய பயணிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று சட்டம் இருக்கிறது.

    எனவே ரெயில்வே நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தரும் விதத்திலும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்திலும் பயணிகள் நடந்துகொள்ள வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களை எந்த விதத்திலும் ரெயிலில் எடுத்து செல்லவோ, பயன்படுத்துவதோ கூடாது.

    அப்படி சட்டவிதிகளை மீறுவோருக்கு அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த விஷயத்தில் பயணிகள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினர், டிக்கெட் பரிசோதகர்கள் ஆகியோர் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இதுதொடர்பான புகார்களுக்கு பயணிகள் 182 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #Southernrailway

    Next Story
    ×