என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவை அருகே விபத்து - 2 தொழிலாளர்கள் பலி
கோவை:
கோவை இருகூரை சேர்ந்தவர் அழகிரி (வயது 53). பீடம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்தி வேல்(44). கட்டிட தொழிலாளிகள்.
இவர்கள் இருவரும் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக மொபட்டில் சென்றனர்.
சின்னியம்பாளையத்தை அடுத்த தொட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் மொபட் சென்ற போது எதிரே வந்த ஜீப் இவர்கள் மீது வேகமாக மோதியது.
இதில் அழகிரி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சக்திவேலை பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விபத்துக்கு காரணமான ஜீப்பை உப்பிலிபாளையத்தை சேர்ந்த அருண்(27) என்பவர் ஓட்டி வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்