search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே விபத்து - 2 தொழிலாளர்கள் பலி
    X

    கோவை அருகே விபத்து - 2 தொழிலாளர்கள் பலி

    கோவை அருகே விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை இருகூரை சேர்ந்தவர் அழகிரி (வயது 53). பீடம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்தி வேல்(44). கட்டிட தொழிலாளிகள்.

    இவர்கள் இருவரும் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக மொபட்டில் சென்றனர்.

    சின்னியம்பாளையத்தை அடுத்த தொட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் மொபட் சென்ற போது எதிரே வந்த ஜீப் இவர்கள் மீது வேகமாக மோதியது.

    இதில் அழகிரி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சக்திவேலை பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விபத்துக்கு காரணமான ஜீப்பை உப்பிலிபாளையத்தை சேர்ந்த அருண்(27) என்பவர் ஓட்டி வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×