search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள் லோடு ஏற்றிவந்த மினிவேன் கவிழ்ந்ததில் 2 பேர் படுகாயம்
    X

    காய்கறிகள் லோடு ஏற்றிவந்த மினிவேன் கவிழ்ந்ததில் 2 பேர் படுகாயம்

    பாப்பாரப்பட்டி அருகே சாலையில் காய்கறிகள் லோடு ஏற்றி வந்த மினிவேன் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்துள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னசாமி (வயது 45) என்பவரும், பாப்பாரப்பட்டியை சேர்ந்த மினிவேன் டிரைவரான சபீர் மகன் யாசின் (22) என்பவரும் மினிவேனில் நேற்று பெங்களூருவுக்கு காய்கறிகள் லோடு ஏற்றுவதற்காக சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து காய்கறிகள் ஏற்றிக்கொண்டு இன்று காலை தருமபுரிக்கு வந்து கொண்டு இருந்தனர். மினி வேனை சின்னசாமி ஓட்டினார். அப்போது பெங்களூரு-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் புலிக்கரை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து மினிவேன் தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் சின்னசாமி மற்றும் யாசின் ஆகிய 2 பேருக்கும் பலத்த படுகாயம் ஏற்பட்டது. 

    மினிவேனில் இருந்த காய்கறிகளும் சாலையில் சிதறிக்கிடந்தன. அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலையில் காய்கறிகள் லோடு ஏற்றி வந்த மினிவேன் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×