search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளச்சல் அருகே புது மாப்பிள்ளை ‘திடீர்’ உயிரிழப்பு
    X

    குளச்சல் அருகே புது மாப்பிள்ளை ‘திடீர்’ உயிரிழப்பு

    குளச்சல் அருகே புது மாப்பிள்ளை திடீரென உயிரிழந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளச்சல்:

    நாகர்கோவில் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 34). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.

    இவரது மனைவி உஷா (29). இவர்களுக்கு திருமணம் முடிந்து 12 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மணி மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் பாலப்பள்ளத்தில் உள்ள உஷாவின் தாயார் வீட்டிற்கு சென்று இருந்தனர்.

    அங்கு இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    குளச்சல் பள்ளிவிளாகம் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (51). பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி சுதா (40). இவர் குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தினகரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட் டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகாத வருத்தத்தில் அவர் அதிகளவு மாத்திரையை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தினகரன் இறந்தார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை பேலஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (70). இவர் வக்கீலாக இருந்தார்.

    இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அவரது மனைவி மற்றும் மகன் நாகர்கோவிலுக்கு வந்திருந்தனர். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சதாசிவம் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சம்பவம் குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரம்மகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பிணமாக கிடந்த சதாசிவத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×