என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தோவாளை அருகே லாரி மீது மினி டெம்போ மோதல்- டிரைவர் பலி
நாகர்கோவில்:
நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் அழகப்ப புரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சுயம்புலிங்கம் (வயது 23). மினி டெம்போ டிரைவர்.
சுயம்புலிங்கம் மினி டெம்போவில் நேற்று இரவு ஆரல்வாய்மொழியில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு வெள்ளமடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் ஆரல்வாய்மொழி தெற்கூரை சேர்ந்த குமார் (38) என்பவர் இருந்தார்.
மினி டெம்போ தோவாளை அருகே பண்டாரபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சுயம்புலிங்கத்தின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடியது. அப்போது திடீரென ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் மீது வேகமாக மோதியது.
இதில் மினி டெம்போவின் முன் பகுதி அப்பளம் போல் நொருங்கியது. அதில் இருந்த சுயம்புலிங்கம், குமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். சுயம்புலிங்கத்திற்கு தலை மற்றும் உடல் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே சுயம்புலிங்கம் பரிதாபமாக இறந்தார். குமார் படுகாயத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பலியான சுயம்புலிங்கத் தின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்