search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் 11-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    நாகர்கோவிலில் 11-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

    நாகர்கோவிலில் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்ட 11-ம் வகுப்பு மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் கலைநகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் சஞ்சய் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சஞ்சய்யை அவரது பெற்றோர் நன்கு படிக்குமாறு கூறி வந்தனர். இதனால் சஞ்சய் அவரது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் சஞ்சய் வெளியே சென்று இருந்தார். அப்போது தனது நண்பர்களிடம் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறினார். அவரை சக நண்பர்கள் சமாதானம் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் பக்கத்தில் உள்ள முந்திரி மரம் ஒன்றில் சஞ்சய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த சஞ்சய்யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சஞ்சய் பலியானது பற்றி தகவல் அறிந்ததும் அவரது நண்பர்கள் ஏராளமானோர் இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். சஞ்சய்யின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. 

    சஞ்சய் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் ஏற்கனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×