என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே வியாபாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மகாலிங்க நகரில் வசித்து வருபவர் அல்லா பகாஷ்(வயது56). பட்டாசு வியாபாரியான இவர், மாந்திரீகம் தொழிலும் செய்து வருகிறார்.
கடந்த ஜூன் மாதம், 26-ந்தேதி இவரது வீட்டின் முன்புறம் உள்ள சிமெண்ட் ஓடு போட்ட தனியறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கு 2 பீரோக்களை உடைத்து அதிலிருந்த 50 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தை அள்ளிச்சென்றனர். . இது குறித்து இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக எளாவூர் அடுத்த தலையாரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் வேறுயாருக்கேனும் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்