search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாப்பாக்குடி அருகே விவசாயி தற்கொலை
    X

    பாப்பாக்குடி அருகே விவசாயி தற்கொலை

    பாப்பாக்குடி அருகே காலில் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்த விவசாயி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    அம்பை அருகே உள்ள பாப்பாக்குடியை அடுத்த அனந்தநாடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூசைத்துரை (வயது65), விவசாயி. இவரது குழந்தைகள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். 

    பூசைத்துரை மட்டும் அனந்தநாடார் பட்டியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். தற்போது அவரது காலில் நீரழிவு நோய் காரணமாக புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனமுடைந்த பூசைத்துரை நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×