என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குளத்தில் மின்வாரிய ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்22 Dec 2018 4:12 PM GMT (Updated: 22 Dec 2018 4:12 PM GMT)
ஆலங்குளத்தில் வேலைக்கு செல்லாத மின்வாரிய ஊழியரை வீட்டில் இருந்தவர்கள் கண்டித்ததால் மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் புரட்சி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது45). இவர் மின் வாரியத்தில் கணக்கீட்டாளராக வேலை செய்து வந்தார். குமரி மாவட்டம் தக்கலையில் பணி புரிந்து வந்த இவர் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
இதனால் அவரை வீட்டில் கண்டித்தனர்.
இதில் மனவேதனை அடைந்த பாலமுருகன் இன்று காலை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்த பாலமுருகனுக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X