search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்ய ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு
    X

    ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்ய ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளது. #Sterlite #SupremeCourt
    சென்னை :

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜனவரி 21-ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். அதுவரை ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், ஜனவரி 21-ல் தலைமை செயலாளர், வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை நேற்று உத்தரவிட்டது.



    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை இயங்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் முன்னர் அளித்த உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி ஜனவரி மாதத்தில் சுப்ரீம் கோர்ட்டை நாடப்போவதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஆலை நிர்வாகம் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Sterlite #SupremeCourt
    Next Story
    ×