search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேல்மருவத்தூருக்கு சென்ற பக்தர்கள் பஸ் மரத்தில் மோதி 15 பேர் படுகாயம்
    X

    மேல்மருவத்தூருக்கு சென்ற பக்தர்கள் பஸ் மரத்தில் மோதி 15 பேர் படுகாயம்

    கிருஷ்ணகிரியில் இருந்து மேல்மருவத்தூருக்கு சென்ற பஸ் மரத்தில் மோதிய விபத்து 15 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து 60 பக்தர்களுடன் பேருந்து திருவண்ணாமலை வழியாக வந்தவாசிலிருந்து சோத்துபாக்கம் நோக்கி சென்றுக் கொண்டு இருந்தது.

    இன்று அதிகாலை 6 மணிக்கு வந்தவாசி சோத்துப்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக செண்டிவாக்கம் என்ற இடத்தில் பஸ் வரும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. பஸ் நிலைதடுமாறி சாலையோர புளியமரத்தில் மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மேல் மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையில் இரவு வேளையில் டிரைவர் பஸ்சை இயக்கி வந்ததாகவும் தூக்க கலக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது.
    Next Story
    ×