என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியலூர் நகர் பகுதியில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு
Byமாலை மலர்21 Dec 2018 5:46 PM GMT (Updated: 21 Dec 2018 5:46 PM GMT)
அரியலூர் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது
தாமரைக்குளம்:
அரியலூர் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. நிர்மலாகாந்தி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டு பேசுகையில், பிளாஸ்டிக் பொருட்களானது எளிதில் மக்காத தன்மை கொண்டவை. சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி, மனிதனையும், மண்வளத்தையும் அதிகளவில் மாசுபடுத்தக்கூடியவை.
பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் தேங்குவதனால் மழைநீர் நிலத்தடிக்குள் செல்வது தடைபட்டு நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. அதே வேளையில் சுற்றுப்புறத்தில் குப்பையாக கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் மழைநீர், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களின் உற்பத்திக்கு காரணமாக அமைகின்றது. பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் நுரையீரல் பிரச்சினை, சுவாசகோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய துணை மேலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. நிர்மலாகாந்தி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டு பேசுகையில், பிளாஸ்டிக் பொருட்களானது எளிதில் மக்காத தன்மை கொண்டவை. சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி, மனிதனையும், மண்வளத்தையும் அதிகளவில் மாசுபடுத்தக்கூடியவை.
பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் தேங்குவதனால் மழைநீர் நிலத்தடிக்குள் செல்வது தடைபட்டு நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. அதே வேளையில் சுற்றுப்புறத்தில் குப்பையாக கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் மழைநீர், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களின் உற்பத்திக்கு காரணமாக அமைகின்றது. பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் நுரையீரல் பிரச்சினை, சுவாசகோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய துணை மேலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X