search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் நகர் பகுதியில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு
    X

    அரியலூர் நகர் பகுதியில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு

    அரியலூர் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது
    தாமரைக்குளம்:

    அரியலூர் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. நிர்மலாகாந்தி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டு பேசுகையில், பிளாஸ்டிக் பொருட்களானது எளிதில் மக்காத தன்மை கொண்டவை. சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி, மனிதனையும், மண்வளத்தையும் அதிகளவில் மாசுபடுத்தக்கூடியவை.

    பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் தேங்குவதனால் மழைநீர் நிலத்தடிக்குள் செல்வது தடைபட்டு நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. அதே வேளையில் சுற்றுப்புறத்தில் குப்பையாக கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் மழைநீர், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களின் உற்பத்திக்கு காரணமாக அமைகின்றது. பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் நுரையீரல் பிரச்சினை, சுவாசகோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என எடுத்துரைத்தனர்.

    தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய துணை மேலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×