search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    பண்ருட்டியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    பண்ருட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பண்ருட்டி:

    பண்ருட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு பண்ருட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் வெற்றிவேலன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். 

    நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன், விழுப்புரம் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தமிழ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    புதுச்சேரி மாநில தொழிலாளர் பாசறை தலைவர் ரமேஷ், குறிஞ்சிப் பாடி தொகுதி செயலாளர் இராமச்சந்திரன், குறிஞ்சிப்பாடி தொகுதி தலைவர் திருச்செல்வம், குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன், பண்ருட்டி தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் பிரகாஷ், தொகுதி பொருளாளர் சக்திவேல், அண்ணா கிராமம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர், அண்ணாகிராமம் நடுவண் 1 ஒன்றிய செயலாளர் இன்பன், அண்ணாகிராமம் நடுவண் ஒன்றிய துணை செயலாளர் மணிவண்ணன், நெல்லிக்குப்பம் நகர ஒருங்கிணைப்பாளர்கள் ஐயப்பன், கார்த்திகேயன் உட்பட ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×