search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது - ஐகோர்ட் உத்தரவு
    X

    ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது - ஐகோர்ட் உத்தரவு

    ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. #Sterlite #MaduraiHC
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜனவரி 21-ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். அதுவரை ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும், ஜனவரி 21-ல் தலைமை செயலாளர், வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை இன்று உத்தரவிட்டு உள்ளது.



    ஸ்டெர்லைட் ஆலை 2 மாதங்களில் திறக்கப்படும் என அந்த ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் நேற்று தெரிவித்த நிலையில், மதுரை ஐகோர்ட் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Sterlite #MaduraiHC
    Next Story
    ×