என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெண்ணாற்றில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்
Byமாலை மலர்20 Dec 2018 6:00 PM GMT (Updated: 20 Dec 2018 6:00 PM GMT)
வலங்கைமான் அருகே வெண்ணாற்றில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே புலவர்நத்தம் பகுதியில் தற்போது சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்கள் கதிர்விடும் நிலையிலும், ஒரு சில இடங்களில் இளம் பயிராகவும் உள்ளது. இந்த நேரத்தில் பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் வெண்ணாற்றில் தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும்.
மேலும் எருமைபடுகை முதல் தென்குளவேலி, நெம்மேல்குடி, இருகரை, மகிமாலை வரையிலான வெண்ணாற்றில் மணல் திருடப்படுவதையும், ஆற்றுக்கரை சேதப்படுத்துவதையும் கண்டித்தும், இதில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் புலவர்நத்தத்தில் நேற்று விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே புலவர்நத்தம் பகுதியில் தற்போது சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது நெற்பயிர்கள் கதிர்விடும் நிலையிலும், ஒரு சில இடங்களில் இளம் பயிராகவும் உள்ளது. இந்த நேரத்தில் பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் வெண்ணாற்றில் தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும்.
மேலும் எருமைபடுகை முதல் தென்குளவேலி, நெம்மேல்குடி, இருகரை, மகிமாலை வரையிலான வெண்ணாற்றில் மணல் திருடப்படுவதையும், ஆற்றுக்கரை சேதப்படுத்துவதையும் கண்டித்தும், இதில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் புலவர்நத்தத்தில் நேற்று விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X