search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி விமான நிலையத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்கம்- வெளிநாட்டு கரண்சிகள் பறிமுதல்
    X

    திருச்சி விமான நிலையத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்கம்- வெளிநாட்டு கரண்சிகள் பறிமுதல்

    திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் கடத்தி வந்த ரூ. 7 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு கரண்சிகளை பறிமுதல் செய்தனர். #trichyairport
    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டில் இருந்து திருச்சிக்கும் விமான சேவை நடைபெற்று வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்துவதும், இங்கிருந்து அரிய வகை உயிரினங்கள் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது. அதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இருந்தாலும் கடத்தல் சம்பவங்கள் குறைந்த பாடியில்லை. 

    இந்நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம் பூரிலிருந்து திருச்சிக்கு மலிண்டோ விமானம் நேற்று இரவு வந்தது. அதில் வந்த  பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மதுரையைச் சேர்ந்த மல்லிகா  சண்முகம் என்பவர் உடலில் மறைத்து எடுத்து வந்த 235 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூபாய் 6.97  லட்சமாகும்.

    இதைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர்ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருவாரூரை சேர்ந்த ரமேஷ் மாசிலாமணி என்பவர் தனது உடமையில் மறைத்து எடுத்து செல்ல இருந்த அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ 2.45 லட்சம் என தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  #trichyairport
    Next Story
    ×