என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விபத்தில் போலீஸ் அதிகாரியின் தாய் பலி - லாரி டிரைவர் மீது வழக்கு
Byமாலை மலர்20 Dec 2018 11:44 AM GMT (Updated: 20 Dec 2018 11:44 AM GMT)
நாகர்கோவில் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ் அதிகாரியின் தாய் பலியானார். இது குறித்து லாரி டிரைவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரி பள்ளத்தைச் சேர்ந்தவர் திரவியம்(வயது74). இவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவருடைய மனைவி விஜயலெட்சுமி(66).
இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஒரு மகன் கோபால். இவர் சென்னையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். நேற்று திரவியம் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.
ராணித்தோட்டம் போக்குவரத்து பனிமனை முன்பு வந்த போது அவருக்கு முன்னாள் சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிளில் மோதியது.
இதில் நிலை தடுமாறி திரவியம் மற்றும் அவரது மனைவி விஜயலெட்சுமி கீழே விழுந்தனர். அப்போது லாரியின் சக்கரத்தில் விஜயலெட்சுமி சிக்கிக் கொண்டார்.
இதில் விஜயலெட்சுமி மீது லாரி ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் இறந்தார். திரவியம் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான விஜயலெட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் லாரியை ஓட்டி வந்தது சுங்கான்கடை களியங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பது தெரிய வந்தது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
நாகர்கோவில் ஆசாரி பள்ளத்தைச் சேர்ந்தவர் திரவியம்(வயது74). இவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவருடைய மனைவி விஜயலெட்சுமி(66).
இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஒரு மகன் கோபால். இவர் சென்னையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். நேற்று திரவியம் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.
ராணித்தோட்டம் போக்குவரத்து பனிமனை முன்பு வந்த போது அவருக்கு முன்னாள் சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிளில் மோதியது.
இதில் நிலை தடுமாறி திரவியம் மற்றும் அவரது மனைவி விஜயலெட்சுமி கீழே விழுந்தனர். அப்போது லாரியின் சக்கரத்தில் விஜயலெட்சுமி சிக்கிக் கொண்டார்.
இதில் விஜயலெட்சுமி மீது லாரி ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் இறந்தார். திரவியம் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான விஜயலெட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் லாரியை ஓட்டி வந்தது சுங்கான்கடை களியங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பது தெரிய வந்தது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X