என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வைகை அணையில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற தூய்மைப்பணி
Byமாலை மலர்20 Dec 2018 8:49 AM GMT
மதுரை மாநகராட்சி வைகை ஆற்றில் 25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் தூய்மைப்பணி கலெக்டர் நடராஜன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் முன்னிலையில் இன்று நடந்தது. #VaigaiDam
மதுரை:
மதுரை மாநகராட்சியினை தூய்மையான சுத்தமான மாநகராட்சியாக மாற்றுவதற்காக பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் சார்பில் வைகை ஆற்றில் திருவேடகம் முதல் அங்காடிமங்கலம் வரையும், மாநகராட்சியின் சார்பில் குருதியேட்டர் காமராசர் பாலம் முதல் ஓபுளாபடித்துறை வரையும் என 44 கிலோ மீட்டர் வரை இன்று நடைபெற்ற மாபெரும் தூய்மைப் பணியில் மொத்தம் 25 ஆயிரம் பங்கேற்றனர்.
இப்பணியில் துப்புரவு ஊழியர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள், மண் கூட்டும் பணி யாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகளும், நாட்டுநலப்பணி, தேசிய மாணவர்படை, தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக வைகை ஆற்றில் கலெக்டர் தலைமையில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவஆசிர்வாதம், மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். #VaigaiDam
மதுரை மாநகராட்சியினை தூய்மையான சுத்தமான மாநகராட்சியாக மாற்றுவதற்காக பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியின் சார்பில் வைகை ஆற்றில் திருவேடகம் முதல் அங்காடிமங்கலம் வரையும், மாநகராட்சியின் சார்பில் குருதியேட்டர் காமராசர் பாலம் முதல் ஓபுளாபடித்துறை வரையும் என 44 கிலோ மீட்டர் வரை இன்று நடைபெற்ற மாபெரும் தூய்மைப் பணியில் மொத்தம் 25 ஆயிரம் பங்கேற்றனர்.
இப்பணியில் துப்புரவு ஊழியர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள், மண் கூட்டும் பணி யாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகளும், நாட்டுநலப்பணி, தேசிய மாணவர்படை, தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக வைகை ஆற்றில் கலெக்டர் தலைமையில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவஆசிர்வாதம், மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். #VaigaiDam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X