search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நொய்யல் அருகே விபத்தில் விவசாயி பலி- அரசு பஸ் டிரைவர் கைது
    X

    நொய்யல் அருகே விபத்தில் விவசாயி பலி- அரசு பஸ் டிரைவர் கைது

    நொய்யல் அருகே சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானர். பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்: 

    கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 83), விவசாயி. இவர் நேற்று முன்தினம்  பாலத்துறை அருகே உள்ள வெற்றிலை தோட்டத்திற்கு சென்றார். பின்னர் தோட்ட வேலைகளை முடித்துவிட்டு இரவு தனது சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பினார். அப்போது சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அவரின் பின்னால் வந்த அரசுப்பேருந்து சைக்கிள் மீது மோதியது.

    இதில் பெரியசாமியின் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

    இது குறித்து பெரியசாமி மகன் செந்தில் நாதன் (40) வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அரசுப்பேருந்து ஓட்டுனர் சேலம் மாவட்டம் கண்டக் காப்பட்டியை சேர்ந்த நல்ல தம்பி என்பவரை கைது செய்தனர். மேலும் விபத்தில் இறந்த பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×