search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளத்தில் மது விற்ற தொழிலாளி கைது
    X

    சாத்தான்குளத்தில் மது விற்ற தொழிலாளி கைது

    சாத்தான்குளத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் மற்றும் போலீசார் முதலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கையில் பையுடன் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர் பரமன்குறிச்சி அருகே உள்ள அத்திஅடிதட்டை சேர்ந்த தொழிலாளி ஆத்திமுத்து (வயது 65). என்பது தெரியவந்தது. மேலும் அவர் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

    இதையடுத்து ஆத்திமுத்துவை கைது செய்து அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×