search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலத்தில் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
    X

    விருத்தாசலத்தில் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

    விருத்தாசலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள கச்சிபெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(40)கொத்தனார். இவரது மனைவி வேம்பாயி(36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான மோகன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றார். மேலும் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு, தகராறு செய்தார். வேம்பாயி தர மறுத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த மோகன் தன் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற வேம்பாயி மீதும் தீ பரவியது. படுகாயமடைந்த இருவரையும் மீட்டு, விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தொடர்ந்து சென்னை, கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மோகன், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து விருத் தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    Next Story
    ×