என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது
மதுரை:
மதுரை திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப் பாண்டி மற்றும் போலீசார் ஹார்விபட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்த போது அதில் 3 கிலோ 350 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அதனையும், அவர்களி டம் இருந்த ரூ.13 ஆயிரத்து 80-ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் அய்யனார் காலனியை சேர்ந்த மதுரைவீரன் (வயது55), அவனியாபுரம் மேலதெருவைச் சேர்ந்த தங்கபெருமாள் (65), இவரது மகன் முத்தையா (25) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன், யாகப்பா நகர் மீனாட்சி தெருவில் ரோந்து சென்றார். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த நரிக்குட்டி என்ற சரவணனை (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¾ கிலோ கஞ்சாவும், ரூ1980-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்