என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தங்கையை ஒரு தலையாக காதலித்ததால் குத்தி கொன்றேன் - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
Byமாலை மலர்18 Dec 2018 11:40 AM GMT (Updated: 18 Dec 2018 11:40 AM GMT)
தங்கையை ஒரு தலையாக காதலித்ததால் கழுத்தை அறுத்து கொன்றதாக கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருப்பூர்:
திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் முருகன் (20). இவர் திருப்பூர் மாஸ்கோ நகரில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மாஸ்கோ நகரில் ஆள் அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதியில் முருகன் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்தது.
இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் உமா மேற்பார்வையில் கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த தனிப்படையில் உதவி கமிஷனர் அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது முருகனை கொலை செய்தது அவரது நண்பர் சிலுக்குவார் பட்டியை சேர்ந்த சசிகுமார் (26) என்பது தெரிய வந்தது. அவரை தனிப்படையினர் கைது செய்தனர்.
அவர் போலீசில் கொடுத்து வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-
நானும், முருகனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். எனக்கு முருகன் தூரத்து உறவு முறையாகும். இதனால் எனது வீட்டிற்கு முருகன் அடிக்கடி வந்து செல்வார். அப்போது எனது தங்கையை ஒரு தலையாக காதலித்து உள்ளார்.
இதனை எனது தங்கை என்னிடம் தெரிவித்தார். நான் முருகனை கண்டித்தேன். அப்போது அடி- தடி பிரச்சினை உருவானது. போலீஸ் நிலையம் வரை சென்று பின்னர் சமாதானம் அடைந்தோம்.
ஊரில் பிரச்சினை ஏற்பட்டதால் முருகனை அவரது பெற்றோர் திருப்பூருக்கு வேலைக்கு அனுப்பி விட்டனர். கடந்த 4 மாதமாக அவர் இங்கு வேலை பார்த்து வந்தார்.
திருப்பூர் வந்த பின்னரும் முருகன் எனது தங்கைக்கு காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனை எனது தங்கை தெரிவித்தார். முருகனை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.
இதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன் திருப்பூர் வந்தேன். நண்பர் அறையில் தங்கி இருந்தேன். சம்பவத்தன்று முருகனுக்கு போன் செய்து மது அருந்தலாம் என அழைத்தேன்.
அவர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். அன்று வருகிறேன் என்றார். அன்று அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக கத்தி ஒன்றை கையில் வைத்திருந்தேன்.
அதன் படி ஞாயிற்றுக்கிழமை இருவரும் மது குடித்தோம். அப்போது எனது தங்கையுடனான ஒரு தலை காதலை கைவிடும் படி முருகனிடம் தெரிவித்தேன்.
எங்களுக்குள் தகராறு உருவானது. பின்னர் இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தோம். மாஸ்கோ நகரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது நான் வைத்திருந்த கத்தியால் முருகன் கழுத்தை அறுத்தேன்.
பின்னர் சரமாரியாக உடலின் பல்வேறு பாகங்களில் குத்தினேன். இதில் அவர் இறந்து விட்டார். சொந்த ஊருக்கு தப்பி செல்ல முயன்றேன். ஆனால் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். #tamilnews
திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் முருகன் (20). இவர் திருப்பூர் மாஸ்கோ நகரில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மாஸ்கோ நகரில் ஆள் அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதியில் முருகன் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல்வேறு இடங்களில் கத்திக் குத்து காயங்கள் இருந்தது.
இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் உமா மேற்பார்வையில் கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த தனிப்படையில் உதவி கமிஷனர் அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது முருகனை கொலை செய்தது அவரது நண்பர் சிலுக்குவார் பட்டியை சேர்ந்த சசிகுமார் (26) என்பது தெரிய வந்தது. அவரை தனிப்படையினர் கைது செய்தனர்.
அவர் போலீசில் கொடுத்து வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-
நானும், முருகனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். எனக்கு முருகன் தூரத்து உறவு முறையாகும். இதனால் எனது வீட்டிற்கு முருகன் அடிக்கடி வந்து செல்வார். அப்போது எனது தங்கையை ஒரு தலையாக காதலித்து உள்ளார்.
இதனை எனது தங்கை என்னிடம் தெரிவித்தார். நான் முருகனை கண்டித்தேன். அப்போது அடி- தடி பிரச்சினை உருவானது. போலீஸ் நிலையம் வரை சென்று பின்னர் சமாதானம் அடைந்தோம்.
ஊரில் பிரச்சினை ஏற்பட்டதால் முருகனை அவரது பெற்றோர் திருப்பூருக்கு வேலைக்கு அனுப்பி விட்டனர். கடந்த 4 மாதமாக அவர் இங்கு வேலை பார்த்து வந்தார்.
திருப்பூர் வந்த பின்னரும் முருகன் எனது தங்கைக்கு காதல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனை எனது தங்கை தெரிவித்தார். முருகனை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.
இதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன் திருப்பூர் வந்தேன். நண்பர் அறையில் தங்கி இருந்தேன். சம்பவத்தன்று முருகனுக்கு போன் செய்து மது அருந்தலாம் என அழைத்தேன்.
அவர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள். அன்று வருகிறேன் என்றார். அன்று அவரை கொலை செய்ய முடிவு செய்தேன். இதற்காக கத்தி ஒன்றை கையில் வைத்திருந்தேன்.
அதன் படி ஞாயிற்றுக்கிழமை இருவரும் மது குடித்தோம். அப்போது எனது தங்கையுடனான ஒரு தலை காதலை கைவிடும் படி முருகனிடம் தெரிவித்தேன்.
எங்களுக்குள் தகராறு உருவானது. பின்னர் இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தோம். மாஸ்கோ நகரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது நான் வைத்திருந்த கத்தியால் முருகன் கழுத்தை அறுத்தேன்.
பின்னர் சரமாரியாக உடலின் பல்வேறு பாகங்களில் குத்தினேன். இதில் அவர் இறந்து விட்டார். சொந்த ஊருக்கு தப்பி செல்ல முயன்றேன். ஆனால் என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X