என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கீழக்கரையில் வியாபாரி வீட்டில் 51 பவுன்-ரூ.1 லட்சம் கொள்ளை
கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஸ்ரீநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50) இவர் இரண்டு மளிகை கடையும், ஒரு காய்கறி கடையும் நடத்தி வருகிறார். கீழக்கரை தட்டான் தோப்பில் இவருடைய மாமியார் புஷ்பம் என்பவர் நேற்று இறந்து விட்டதை தொடர்ந்து வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மாமியார் வீட்டிற்கு சென்று விட்டார்.
இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 51 பவுன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கீழக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்