search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டி அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் 6 பவுன் செயின் பறிப்பு
    X

    பண்ருட்டி அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் 6 பவுன் செயின் பறிப்பு

    பண்ருட்டி அருகே இன்று காலை அரசு பள்ளி ஆசிரியையிடம் 6 பவுன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அடுத்த ஆத்திரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி சத்யா (வயது 30). இவர் பண்ருட்டி அருகே சேந்தநாடு பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் சத்யா தனது மொபட்டில் பள்ளிக்கு சென்றார். அவர் குடியிருப்பு - விசூர் சாலை அருகே சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் ஹெல்மெட் அணிந்து 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    திடீரென அந்த மர்ம நபர்கள் சத்யாவை கீழே தள்ளி விட்டு அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் ஆசிரியை காயமடைந்தார். காயமடைந்த சத்யாவை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து முத்தாண்டி குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆசிரியையிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×