search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரி அருகே ஓசியில் பிரியாணி கேட்டு ரகளை - ஊழியர்கள் மீது தாக்குதல்
    X

    பொன்னேரி அருகே ஓசியில் பிரியாணி கேட்டு ரகளை - ஊழியர்கள் மீது தாக்குதல்

    பொன்னேரி அருகே ஓசியில் பிரியாணி கேட்டு ஊழியர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரியாணி கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வருபவர்கள் வசிம், லிசன். இரவில் கடைக்கு வந்த 3 வாலிபர்கள் பணம் கொடுக்காமல் பிரியாணி, காடை வருவல் கேட்டனர். இதனை கடையில் இருந்த ஊழியர்கள் கண்டித்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்கள் வசிம், லிசனை சரமாரியாக தாக்கி தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலாடு பகுதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ், கும்மங்குளம் பாலாஜி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் பரிக்கபட்டை சேர்ந்த பிரகாசை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×