என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூரில் விடுதலை சிறுத்தை ரெயில் மறியல்- 150 பேர் கைது
Byமாலை மலர்17 Dec 2018 11:45 AM GMT (Updated: 17 Dec 2018 11:45 AM GMT)
வில்லியனூரில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜாவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக விமர்சித்த பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜாவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வில்லியனூர் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி போராட்டம் நடத்த விடுதலை சிறுத்தை கட்சியினர் சுல்தான்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஒன்று திரண்டனர்.
அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த பயணிகள் ரெயிலை மறித்தனர். இதையடுத்து அவர்களை வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
விடுதலை சிறுத்தை கட்சியின் முதன்மை செயலாளர் தேவ. பொழிலன், தொகுதி செயலாளர் தமிழ்வளவன், கொள்கை பரப்பு செயலாளர் ஆதவன், எழில்மாறன், வாகையரசு உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
உப்பளம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணா சாலை அருகே சாலை மறியல் நடந்தது. தொகுதி செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் திருக்குமரன், ஜெயசெல்வி, செழியன், கலைச்செல்வன், சந்துரு, நீலமேகம், குமார், வினோத், யுவராஜ், ரமேஷ், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக விமர்சித்த பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜாவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வில்லியனூர் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி போராட்டம் நடத்த விடுதலை சிறுத்தை கட்சியினர் சுல்தான்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஒன்று திரண்டனர்.
அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த பயணிகள் ரெயிலை மறித்தனர். இதையடுத்து அவர்களை வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
விடுதலை சிறுத்தை கட்சியின் முதன்மை செயலாளர் தேவ. பொழிலன், தொகுதி செயலாளர் தமிழ்வளவன், கொள்கை பரப்பு செயலாளர் ஆதவன், எழில்மாறன், வாகையரசு உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
உப்பளம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணா சாலை அருகே சாலை மறியல் நடந்தது. தொகுதி செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் திருக்குமரன், ஜெயசெல்வி, செழியன், கலைச்செல்வன், சந்துரு, நீலமேகம், குமார், வினோத், யுவராஜ், ரமேஷ், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X