என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சின்னமனூர் அருகே பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர்
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள டி.சிந்தலைச்சேரி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்பால் பிரபு (வயது 33). இவருக்கும் சகாய ஜான்சிராணி (31) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
சகாய ஜான்சிராணி சிலமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணி புரிந்து வருகிறார். கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் சகாய ஜான்சிராணி தனது 2 குழந்தைகளுடன் கடந்த 10 மாதமாக தனியாக வசித்து வருகிறார்.
சகாய ஜான்சிராணி சின்னமனூரில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜான்பால் பிரபு சம்பவத்தன்று தனது மனைவியிடம் வந்து விவாகரத்து வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டினார்.
அவர் மறுக்கவே வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றார். இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜான்பால் பிரபுவை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்