என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று காலை 2 கடைகளில் தீ விபத்து
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகக்கனி. இவர் கிருஷ்ணன் கோவில் பஸ் நில யம் அருகில் மதுரை- செங்கோட்டை சாலையில் ஒரே கட்டிடத்தில் கடைகள் வைத்துள்ளார். கீழ் தளத்தில் செருப்பு கடையும், மேல்தளத்தில் பரிசுப் பொருட்கள் கடையும் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு முருகக்கனி வீட்டுக்கு சென்று விட்டார்.
இன்று காலை மாடியில் இருந்த பரிசுப்பொருட்கள் கடையில் இருந்து கரும்புகை வெளியானது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் உடனே முருகக்கனிக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் கிருஷ்ணன் கோவில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அதற்குள் தீ கீழே உள்ள செருப்பு கடைக்கும் பரவியது.
தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீயின் தாக்கம் அதிகம் இருந்ததால் விருதுநகரில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் கருப்பையா தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் போலீசார் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் 2 கடைகளில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
இது குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்