search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரியில் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை உயர்வு
    X

    தருமபுரியில் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை உயர்வு

    தருமபுரி மாவட்டத்தில் காய்கறிகளின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. 1 கிலோ பீன்ஸ் ரூ.28-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பொதுமான மழை பெய்து வந்ததால் விவசாயம் நன்றாக இருந்து வந்தது. இதனால் காய்கறிகளின் விலையும் குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது காய்கறிகளின் அறுவடை முடிந்து விட்டதால், காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஆனாலும் இன்று விடுமுறை நாள் என்பதால் உழவர் சந்தையில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. 
    காய்கறிகளின் விலை வருமாறு:-

    காய்கறிகளின் அதிகபட்ச விலையாக 1 கிலோ பீன்ஸ் ரூ.28-க்கும், அவரைக்காய் 1 கிலோ ரூ.30-க்கும், கேரட் 1 கிலோ ரூ.36-க்கும், தக்காளி 1 கிலோ ரூ.8-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    முறுங்கைகாய் 1 கிலோ ரூ.40-க்கும், வெண்டைக்காய் 1 கிலோ ரூ.10-க்கும், பீட்ருட் 1 கிலோ ரூ.24-க்கும், பீர்க்கங்காய் 1 கிலோ ரூ.26-க்கும், உருளைக்கிழங்கு 1 கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் 1 கிலோ ரூ.28-க்கும் மற்றும் பாகல் 1 கிலோ ரூ.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×