என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சென்னையில் ரூ.43 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - பெண் தொழில் அதிபர் கைது
சென்னை:
சென்னையை சேர்ந்த பெண் தொழில் அதிபர் பூனம் சர்மா. இவர் 3 நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களின் இயக்குனராக இருக்கிறார்.
இந்த நிறுவனங்களுக்கு பொருட்கள் எதுவும் வாங்காமல் போலி விலைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் போலி விலைப்பட்டியல் தயாரித்து தங்கள் பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.
இதன் மூலம் ரூ.43 கோடியே 52 லட்சம் ஜி.எஸ்.டி. வரி மோசடி செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த தகவலை ஜி.எஸ்.டி. இயக்குனரக சென்னை வடக்கு முதன்மை கமிஷனர் ராகேஷ் குமார் சின்கா தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி மோசடி சட்டத்தின் கீழ் பூனம் சர்மா நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜி.எஸ்.டி. வரி மோசடி வழக்கில் இவரையும் சேர்த்து சென்னையில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு கடந்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வர்த்தகர் தனராம் என்பவர் கைது செய்யப்பட்டார். 29-ந்தேதி திலீப்குமார் (45). கைதானார். இவர் ஸ்டீல், ரசாயன பொருட்கள், பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தோல் பொருட்கள் விற்பனை செய்து வந்தார். #GST
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்