என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை
Byமாலை மலர்16 Dec 2018 5:33 AM GMT (Updated: 16 Dec 2018 5:53 AM GMT)
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. #KarunanidhiStatue
சென்னை:
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமலும் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதி செய்துள்ளனர்.
கொடைக்கானலில் கஜா புயல் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. ஏற்கனவே திட்டமிட்ட இந்த நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று மாலை அங்கு புறப்பட்டு செல்கிறார். இதற்கிடையே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேரப்போவதாக நேற்று மாலை தகவல்கள் பரவியது.
காங்கிரஸ் கட்சியோடு இது தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டதாகவும், கமல் 5 தொகுதிகளை கேட்டு இறுதியில் 2 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் கமல் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் டுவிட்டர் மூலமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமலும் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் உறுதி செய்துள்ளனர்.
கொடைக்கானலில் கஜா புயல் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. ஏற்கனவே திட்டமிட்ட இந்த நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று மாலை அங்கு புறப்பட்டு செல்கிறார். இதற்கிடையே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கமல் சேரப்போவதாக நேற்று மாலை தகவல்கள் பரவியது.
காங்கிரஸ் கட்சியோடு இது தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டதாகவும், கமல் 5 தொகுதிகளை கேட்டு இறுதியில் 2 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் கமல் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் டுவிட்டர் மூலமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், நான் அரசியலுக்கு வந்த காரணத்தை நாம் உணர்வோம். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல. வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X