search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர்  அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    ஸ்ரீபெரும்புதூர் அருகே தந்தை திட்டியதால் இளம்பெண் துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு கீழாண்டை வீதியை சேர்ந்தவர் ஜெகன். இவரது மகள் நிஷாந்தி (வயது 18) பிளஸ்-2 முடித்த இவர் வீட்டு வேலைகளை செய்து வந்தார். நேற்று மாலை நிஷாந்திக்கும் அவரது தந்தை ஜெகனுக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஜெகன் மகளை திட்டி விட்டு வெளியே சென்று விட்டார். இதில் மனமுடைந்த நிஷாந்தி வீட்டில் யாரும் இல்லாத போது துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிஷாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்
    Next Story
    ×